அரசியல்

தி.மு.க எம்.பிக்கள் குழுவாக பிரிந்தார்களா...? எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் விளக்கம்

தி.மு.க எம்.பிக்கள் குழுவாக பிரிந்து செயல்படுவதாக வெளிவரும் தகவல்கள் பொய் என அக்கட்சியின் தென்சென்னை தொகுதி எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் விளக்கம் அளித்துள்ளார்.

தந்தி டிவி

தி.மு.க எம்.பிக்கள் குழுவாக பிரிந்து செயல்படுவதாக வெளிவரும் தகவல்கள் பொய் என அக்கட்சியின் தென்சென்னை தொகுதி எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் விளக்கம் அளித்துள்ளார். சைதாப்பேட்டை ரயில்நிலையத்தை பார்வையிட்டு, பயணிகளின் குறைகளை கேட்டறிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு வருவதாக கூறினார். உள்நாட்டு உற்பத்தி சரிவு, பொருளாதார வீழ்ச்சியை சரிசெய்யாமல், பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள் மேற்கொள்ளும் வெளிநாட்டு பயணங்களால் எந்தவித பயனும் இருக்கப் போவதில்லை என தமிழச்சி தங்கபாண்டியன் கருத்து கூறினார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்