மக்களவை தேர்தலில் தனக்கு வாய்ப்பளித்த பிரதமர் மோடிக்கு பாஜக தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். வளர்ச்சிக்கான அரசியல் மாற்றத்தை தமிழ்நாடு மக்கள் எதிர்பார்த்திருக்கும் போது இந்த அறிவிப்பு வந்துள்ளதாகவும், பாஜக வெல்லப்போகும் 400 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தமிழ்நாடு பாஜகவின் பங்கும் இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.