அரசியல்

"ஆந்திராவுக்கு 3 தலைநகர் அமைவது உறுதி" - ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திராவில் 3 தலைநகரங்கள் அமைவது உறுதி என அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

ஆந்திராவுக்கு 3 தலைநகர்கள் அமைப்பதற்கான மசோதா அம்மாநில சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அப்போது மசோதா தொடர்பாக எதிர்கட்சியினர் எழுப்பிய கேள்விகளுக்கு முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பதிலளித்தார். இந்த விவகாரத்தில் அமராவதிக்கு எதிராக எந்தவித காழ்ப்புணர்ச்சியையும் தான் காட்டவில்லை எனவும் , அமராவதி சட்டமன்றத் தலைநகராகவும், விசாகப்பட்டினம் நிர்வாக தலைநகரமாகவும், கர்னூல் சட்ட தலைநகரமாகவும் செயல்படும் என கூறினார். மேலும், அமராவதிக்கு மட்டும் கோடிக்கணக்கில் செலவழிக்க விரும்பவில்லை எனவும் அனைத்து சமூகத்தினரின் ஆதரவையும் பெற்று 151 எம்எல்ஏக்களுடன் முதல்வரான தனக்கு மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் சீரான வளர்ச்சியை ஏற்படுத்துவதே நோக்கம் என கூறினார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ