அரசுக்கு அன்புமணி முக்கிய கோரிக்கை
காவல்துறையினரின் பதவி உயர்வு, சமூகநீதி மற்றும் படி வழங்குவதில் உள்ள பாகுபாடுகளை தமிழக அரசு உடனடியாக களைய வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் பதவி உயர்வு பிரச்சினைக்கு அரசு தீர்வு காண வேண்டும் என்றும், தமிழ்வழிக் கல்வி இடஒதுக்கீடு வழங்கப்படாததையும் சரிசெய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். காவல்துறையினரின் அனைத்து குறைகளையும் ஆய்வு செய்ய சிறப்புக்குழு அமைத்து, ஒரு மாதத்திற்குள் தீர்வு காண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.