Amit shah Speech | அறிவித்தார் அமித்ஷா #amitshah #assam #naxals #thanthitv "இந்தியா நக்சல் இல்லாத நாடாக மாறும்" - அமித்ஷா அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற மத்திய ரிசர்வ் காவல் படையின் 87வது எழுச்சி தின அணிவகுப்பில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு உரையாற்றினார். அசாம் மற்றும் நாட்டின் பாதுகாப்புக்காக ஏராளமான வீரர்கள் தங்கள் உயிரையும் தியாகம் செய்துள்ளனர் என அவர் பாராட்டினார். மேலும் காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் குறைந்து, வளர்ச்சி வேகம் பெற்றுள்ளதாகவும், இதற்கு பாதுகாப்புப் படை மற்றும் ஜம்மு & காஷ்மீர் காவல்துறையின் பங்கு முக்கியமானது என்றும் தெரிவித்தார். மாவோயிசத்தை முற்றிலும் ஒழிக்க அரசு உறுதிபூண்டுள்ளதாகவும், மார்ச் 31க்குள் இந்தியா நக்சல் இல்லாத நாடாக மாறும் என திட்டவட்டமாக அறிவித்தார்.