அமெரிக்காவுக்கான இந்திய தூதராக Taranjit Singh Sandhu வை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நியமித்துள்ளது. தரஞ்சித் சிங் தற்போது இலங்கைக்கான இந்திய தூதராக பணியாற்றி வந்த நிலையில், தற்போது மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. 1988ஆம் ஆண்டு முதல் வெளியுறவுத்துறையில் தரஞ்சித் சிங் பணியாற்றி வருகிறார். 1998ஆம் ஆண்டு அணு ஆயுத சோதனை நடத்தியதற்கு இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்த போது, வாசிங்டனில் இந்தியாவுக்கான செயலாளராக பணியாற்றி வந்த தரஞ்சித் சிங்கே, பல்வேறு பேச்சுவார்த்தை நடத்தி இந்திய, அமெரிக்க உறவை மேம்படுத்த முயற்சி செய்தார்.