செங்குன்றம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் வேணுகோபால் கூட்டணி கட்சி தொண்டர்களுடன் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அதிமுக தொண்டர் ஒருவர் எம்ஜிஆர் வேடம் அணிந்து வேட்பாளருடன் வந்து வாக்கு சேகரித்தது தொண்டர்களை உற்சாகப்படுத்தியது.