அரசியல்

இடைத்தேர்தல் : 90 பேர் விருப்பம் - அதிமுக நேர்காணல்

நாங்குநேரி - விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு கொடுத்த பிரமுகர்களிடம் அதிமுக உயர்மட்டக்குழு, நேர்காணல் நடத்தியது.

தந்தி டிவி

சென்னை - ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நேர்காணலில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், அவைத்தலைவர் மதுசூதனன் மற்றும் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

விழுப்புரம், விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி - காமராஜ் நகர் ஆகிய 3 தொகுதிகளிலும் போட்டியிட, மொத்தம் 90 பேர் விருப்ப மனு அளித்த நிலையில், அனைவரிடமும் நேர்காணல் நடத்தப்பட்டது. கூட்டம் முடிந்த பிறகு வேட்பாளர் அறிவிப்பு பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டபோது, வேட்பாளர் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என கூறினார்.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்