அரசியல்

இடைத்தேர்தல் : 90 பேர் விருப்பம் - அதிமுக நேர்காணல்

நாங்குநேரி - விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு கொடுத்த பிரமுகர்களிடம் அதிமுக உயர்மட்டக்குழு, நேர்காணல் நடத்தியது.

தந்தி டிவி

சென்னை - ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நேர்காணலில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், அவைத்தலைவர் மதுசூதனன் மற்றும் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

விழுப்புரம், விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி - காமராஜ் நகர் ஆகிய 3 தொகுதிகளிலும் போட்டியிட, மொத்தம் 90 பேர் விருப்ப மனு அளித்த நிலையில், அனைவரிடமும் நேர்காணல் நடத்தப்பட்டது. கூட்டம் முடிந்த பிறகு வேட்பாளர் அறிவிப்பு பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டபோது, வேட்பாளர் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என கூறினார்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு