அரசியல்

"அரிக்கமேடு அகழ்வாய்வு இடத்தை பாதுகாக்க வேண்டும்" - மாநிலங்களவையில் அ.தி.மு.க. எம்.பி. கோரிக்கை

புதுச்சேரி அரிக்கமேடு அகழ்வாய்வு இடத்தை உலக பாரம்பரிய இடமாக அறிவிக்க வேண்டும் என மாநிலங்களவையில் அ.தி.மு.க. எம்.பி. கோகுலகிருஷ்ணன் கோரியுள்ளார்.

தந்தி டிவி
புதுச்சேரி அரிக்கமேடு அகழ்வாய்வு இடத்தை உலக பாரம்பரிய இடமாக அறிவிக்க வேண்டும் என மாநிலங்களவையில் அ.தி.மு.க. எம்.பி. கோகுலகிருஷ்ணன் கோரியுள்ளார். மேலும், அங்கு ஒரு அருங்காட்சியகம் அமைக்கும், அதே நேரத்தில், ஒருங்கிணைந்த புதிய அகழாய்வு பணிகளை தொடங்க வேண்டும் எனவும் கோகுலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தார். அரிக்கமேடு நாகரிகம் கி.பி. முதல் நூற்றாண்டை சார்ந்தது என்றும், 34 புள்ளி 57 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அந்த இடம் பாதுகாக்கப்படாமலும், மண் அரிப்பு மற்றும் ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அ.தி.மு.க. எம்.பி. கோகுலகிருஷ்ணன் சுட்டிக்காட்டி உள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை