அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை குறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டுமென, அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் வலியுறுத்தினார். சட்டப்பேரவையில், சட்டத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அவர், சட்டக்கல்லூரிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்றும், தளவாய் சுந்தரம் கேள்வி எழுப்பினார்.