அரசியல்

அதிமுக உறுப்பினர்கள் திடீர் வெளிநடப்பு... கூட்டத்தில் பரபரப்பு

தந்தி டிவி

ஈரோடு மாநகராட்சி கூட்டத்தின் போது மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்எல்ஏமான ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படாதது குறித்து, அக்கட்சி கவுன்சிலர் சபுராமா ஜாபர்சாதிக் கேள்வி எழுப்பினார். கூட்டத்தில், மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படாதது குறித்து, காங்கிரஸ் கவுன்சிலர் சபுராமா ஜாபர்சாதிக் கேள்வி எழுப்பினார். இதை கண்டித்து வெளிநடப்பும் செய்வதாக அவர் அறிவித்த நிலையில், உடனடியாக இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமையை கண்டித்து, அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை