AIADMK | Orathanadu | M Sekar | பசுவை கண்டதும்.. உடனே கோ பூஜை செய்து.. வேட்புமனு தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர் #Thanjavur #AIADMK #Orathanadu #MSekar தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மா. சேகர், தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். ஒரத்தநாடு தொகுதியில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மா. சேகர், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கணக்கான தொண்டர்களுடன் ஊர்வலமாகப் புறப்பட்டார். வட்டாட்சியர் அலுவலக நுழைவாயிலில் நின்றிருந்த பசுமாட்டிற்கு மாலை அணிவித்து, அதற்கு ‘கோ பூஜை’ செய்து வழிபாடு நடத்தினார். அதனைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தும் அலுவலர் ரேணுகாதேவியிடம் தனது வேட்புமனுவை அவர் முறைப்படி சமர்ப்பித்தார்.