#admk #madhuranthagam மகளிருக்கான வாக்குறுதிகளை கூறி அதிமுக வேட்பாளர் மரகதம் பிரச்சாரம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும், அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மையூர், சம்பாதி நல்லூர், அத்தியூர், உள்ளிட்ட கிராமங்களில் நடைபயணமாக சென்று வாக்குகள் சேகரித்த நிலையில், அப்போது பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன் பிறகு, பிரச்சார வாகனத்தில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், மகளிருக்கான அதிமுகவின் வாக்குறுதிகளை வரிசையாக கூறி, ஆதரவு திரட்டினார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி அமைந்தால் மக்களுக்கு தேவையான புதிய திட்டங்கள் கொண்டு வரப்படும் என்றும், எனவே அதிமுக கூட்டணிக்கு மிகப்பெரிய அளவிலான ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.