அரசியல்

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு : உச்சநீதிமன்றத்தில் அ.தி.மு.க. கொறடா கேவியட் மனுதாக்கல்

அ.தி.மு.க கொறடா எஸ்.ராஜேந்திரன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

தந்தி டிவி
முதலமைச்சரை மாற்றக்கோரி ஆளுநரிடம் மனு அளித்த 18 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்து தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அளித்த உத்தரவு செல்லும் என அண்மையில் இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மூன்றாவது நீதிபதி சத்யநாராயணா தீர்ப்பளித்தார். இந்தநிலையில், அ.தி.மு.க கொறடா எஸ்.ராஜேந்திரன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில், 18 பேர் மேல்முறையீடு செய்யும் நிலையில், உத்தரவு பிறப்பிக்கும் முன்பு தங்கள் தரப்பு கருத்தையும் கேட்க வேண்டும் என கோரப்பட்டு உள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்