சென்னையில் 16 சட்டமன்ற தொகுதிகளுக்கு 8 பேர்.. நெருங்க நெருங்க பரபரக்கும் களம் #tnelection2026 #chennai சென்னையில் 16 தொகுதிகளுக்கு 8 நோடல் அதிகாரிகள் நியமனம் சென்னையில் 16 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணிகளை கண்காணிக்க 8 நோடல் அதிகாரிகளை சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் குமரகுருபரன் நியமித்துள்ளார். ஒவ்வொரு அதிகாரியும் தலா இரண்டு தொகுதிகளை மேற்பார்வை செய்வார்கள் என்றும், மனிதவளம், நிர்வாகம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பராமரிப்பு, போக்குவரத்து, பயிற்சி உள்ளிட்ட பணிகளுக்கு தனித்தனி பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாதிரி நடத்தை விதிமுறைகள், செலவின கண்காணிப்பு, சட்டம்-ஒழுங்கு, ஊடக தொடர்பு, வாக்காளர் உதவி மையங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளும் இவர்களின் கண்காணிப்பில் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.