அரசியல்

தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் இடைத்தேர்தலில் போட்டியிட தடையில்லை - தலைமை தேர்தல் ஆணையர்.

தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் இடைத்தேர்தலில் போட்டியிட தடையில்லை என தலைமை தேர்தல் ஆணையர் ஒ.பி.ராவத் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

18 எம்.எல்.ஏக்கள் வழக்கில், 30 நாட்களுக்கு மேல்முறையீடு செய்யப்படவில்லை என்றால், 18 தொகுதிகளுக்கும் ஜனவரி மாதத்திற்குள் தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தந்தி டிவிக்கு தொலைபேசி வாயிலாக அவர், சில தகவல்களை அளித்துள்ளார். 18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் மூன்றாவது நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசம் இருப்பதாகவும், 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யப்படவில்லை என்றால், உடனடியாக இடைத்தேர்தல் பணிகள் துவங்கப்படும் என்றும் ஓ.பி. ராவத் தெரிவித்துள்ளார்.

தற்போது காலியாகவுள்ள திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு ஜனவரி மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளதால், அந்த இரு தொகுதிகளுடன் சேர்த்து 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாகவும் ராவத் தெரிவித்துள்ளார். மேலும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள், இடைத்தேர்தலில் போட்டியிட தடையில்லை என்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராவத் கூறியுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்