அரசியல்

குழந்தைகள் தொடர்பான 1,344 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது - அமைச்சர் சரோஜா

குழந்தைகள் கடத்தல் தொடர்பாக இதுவரை ஆயிரத்து 568 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஆயிரத்து 344 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளதாக சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது ,மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் செம்மலை, குழந்தைகள் கடத்தல், பாலியல் தொல்லை உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், எனவே குழந்தைகள் நலவாரியம் அமைப்பதுடன், அந்த வாரியத்திற்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கி குற்றங்களை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரினார். இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் சரோஜா, குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்பட்டு, கடந்த ஆண்டு மார்ச் மாதம் வரை, ஆயிரத்து 568 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஆயிரத்து 344 வழக்குகள் தீர்வு காணப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். மேலும், ஆணையத்திற்கும் வாரியத்திற்கும் ஒரே அளவு அதிகாரம் என்பதால் உறுப்பினரின் கோரிக்கை பரிசீலிக்கப்பட வேண்டியதில்லை என்றும் அமைச்சர் சரோஜா பதிலளித்தார்.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே