அரசியல்

11 எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கக் கோரும் வழக்கு : உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ-க்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி திமுக தொடர்ந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

தந்தி டிவி
கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கைக் கோரும் தீர்மானத்திற்கு எதிராக, ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 11 பேர் வாக்களித்தனர். இதில், எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மையை பெற்று ஆட்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரசுக்கு எதிராக வாக்களித்த 11 அதிமுக எம்.எல்.ஏ-க்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி திமுக தொடர்ந்த வழக்கை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என திமுக தரப்பில் நேற்று கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கோடு 3 எம்.எல்.ஏ-க்கள் தொடர்பான வழக்கும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை