அரசியல்

11 சட்ட மன்ற உறுப்பினர்கள் தகுதிநீக்க வழக்கு : விரைவில் தீர்ப்பு வரவுள்ளது - ஆர்.எஸ்.பாரதி தகவல்

துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கின் தீர்ப்பு விரைவில் வர உள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறினார்.

தந்தி டிவி
துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கின் தீர்ப்பு விரைவில் வர உள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறினார். திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தல் அலுவலம் திறக்கும் நிகழ்ச்சியில் கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஐ. பெரியசாமி, அமைப்பு செயலாளர் ஆர்,எஸ் பாரதி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ஆர் எஸ் பாரதி, ஒரு ஆண்டுக்கு முன்னரே கட்சி ஒழுங்கை மீறிய 3 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது தற்போது நடவடிக்கை எடுக்க விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக விமர்சனம் செய்தார். பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கில் விரைவில் தீர்ப்பு வர உள்ளது என்றும் கூறினார். இந்நிகழ்ச்சியில் பேசிய ஐ. பெரியசாமி, பாஜகவுக்கு வட மாநிலங்களிலும் செல்வாக்கு சரிந்துள்ளதாகவும், 182 இடங்களுக்கு மேல் வெல்வதற்கு வாய்ப்பில்லை எனவும் கூறினார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்