செய்திகள்

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா - வெளியான முக்கிய தகவல்

தந்தி டிவி

ஆன்லைன் விளையாட்டுகளை ஊக்குவித்தல் மற்றும் முறைப்படுத்துதல் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.

இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததும் இது சட்டமாக நடைமுறைக்கு வரும்.

இந்த மசோதா மின் விளையாட்டுகள் (E-Sports) மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை ஊக்குவிக்கிறது. அதே நேரத்தில் தீங்கு விளைவிக்கும் ஆன்லைன் பண விளையாட்டு சேவைகள், ஆன்லைன் ஃபேண்டஸி ஸ்போர்ட்ஸ் , ஆன்லைன் சூதாட்டம், விளம்பரங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய நிதி பரிவர்த்தனைகளைத் தடை செய்கிறது.

ஆன்லைன் விளையாட்டுகளை நடத்தினால் 03 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ஒரு கோடி ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும். விளம்பரம் செய்தால் 2 ஆண்டு சிறை, 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்