செய்திகள்

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா - வெளியான முக்கிய தகவல்

தந்தி டிவி

ஆன்லைன் விளையாட்டுகளை ஊக்குவித்தல் மற்றும் முறைப்படுத்துதல் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.

இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததும் இது சட்டமாக நடைமுறைக்கு வரும்.

இந்த மசோதா மின் விளையாட்டுகள் (E-Sports) மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை ஊக்குவிக்கிறது. அதே நேரத்தில் தீங்கு விளைவிக்கும் ஆன்லைன் பண விளையாட்டு சேவைகள், ஆன்லைன் ஃபேண்டஸி ஸ்போர்ட்ஸ் , ஆன்லைன் சூதாட்டம், விளம்பரங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய நிதி பரிவர்த்தனைகளைத் தடை செய்கிறது.

ஆன்லைன் விளையாட்டுகளை நடத்தினால் 03 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ஒரு கோடி ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும். விளம்பரம் செய்தால் 2 ஆண்டு சிறை, 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்