ஆம்புலன்சில் கஞ்சா கடத்திய பிரபல யூடியூபர் ஆகாஷ் ஜாதவ் கைது கஞ்சா கடத்தல் கும்பலின் மூளையாக செயல்பட்டதாக, பிரபல யூடியூபரும் பாம்பு பிடி வீரருமான ஆகாஷ் ஜாதவ் கைது செய்யப்பட்டுள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் மகாசமுந்தில் ஆம்புலன்சில் கடத்தப்பட்ட 5 குவிண்டாலுக்கும் அதிகமான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 2.6 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் ஆகாஷுடன் சேர்த்து மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.