#vinayagarchaturthi2026 #vinayagarchathurthi #gujrat #thanthitv
குஜராத் மாநிலம் வதோதராவில் விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை தர மறுத்ததாக கூறி கடைகளை இளைஞர்கள் அடித்து நொறுக்கியுள்ளனர். இளைஞர்கள் சிலர் ராஜஸ்தான் குல்பி சென்டர் கடை உரிமையாளரிடம் 21 ஆயிரம் ரூபாய் நன்கொடை கேட்டதாக கூறப்படுகிறது. அவ்வளவு தொகையை வழங்க முடியாது என்றும், 1,000 ரூபாய் மட்டுமே வழங்க முடியும் என்றும் உரிமையாளர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் கடைக்குள் புகுந்து பொருட்களை அடித்து நொறுக்கியதுடன், உரிமையாளரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சம்பவத்திற்கு வியாபாரிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.