இந்தியா

கர்நாடகா : நீர்வீழ்ச்சியில் இருந்து தவறி விழுந்த இளைஞர் பலி

கர்நாடகா : நீர்வீழ்ச்சியில் இருந்து தவறி விழுந்த இளைஞர் பலி, உயிரிழந்த இளைஞரின் உடலை தேடும் பணி தீவிரம்

தந்தி டிவி
கர்நாடகாவில் 170 அடி நீர்வீழ்ச்சியின் உச்சியில் இருந்து தவறி விழுந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். பெலகாவியில் உள்ள கோகாக் நீர்வீழ்ச்சியில் ரம்ஜான் பண்டிகையொட்டி ஏராளமான சுற்றுலாப்பயணிகள் திரண்டிருந்தனர். இந்நிலையில் காசி என்ற இளைஞர், பக்கவாட்டு வழியாக பாறைகளின் வழியே நீர்வீழ்ச்சியின் உச்சிக்கு செல்ல முயன்றார். அப்போது திடீரென தவறி விழுந்த அவர், பலியானார். அருவியின் நீரில் அடித்து செல்லப்பட்ட உடலை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்