இந்தியா

கர்நாடகா : நீர்வீழ்ச்சியில் இருந்து தவறி விழுந்த இளைஞர் பலி

கர்நாடகா : நீர்வீழ்ச்சியில் இருந்து தவறி விழுந்த இளைஞர் பலி, உயிரிழந்த இளைஞரின் உடலை தேடும் பணி தீவிரம்

தந்தி டிவி
கர்நாடகாவில் 170 அடி நீர்வீழ்ச்சியின் உச்சியில் இருந்து தவறி விழுந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். பெலகாவியில் உள்ள கோகாக் நீர்வீழ்ச்சியில் ரம்ஜான் பண்டிகையொட்டி ஏராளமான சுற்றுலாப்பயணிகள் திரண்டிருந்தனர். இந்நிலையில் காசி என்ற இளைஞர், பக்கவாட்டு வழியாக பாறைகளின் வழியே நீர்வீழ்ச்சியின் உச்சிக்கு செல்ல முயன்றார். அப்போது திடீரென தவறி விழுந்த அவர், பலியானார். அருவியின் நீரில் அடித்து செல்லப்பட்ட உடலை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்