இந்தியா

3 பெண்களை திருமணம் செய்து மோசடி செய்த இளைஞர் கைது

3 பெண்களை திருமணம் செய்து மோசடி செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

தந்தி டிவி

புதுக்கோட்டை வசந்தம் நகரை சேர்ந்த சோலை கணேஷ் என்பவர், ஏற்கனவே திருமணமான நிலையில், சிங்கப்பூரில் வேலை பார்த்தபோது சங்கீதா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், சொந்த ஊருக்கு திரும்பி வந்து 17 வயது பெண் ஒருவரை மூன்றாவதாக திருமணம் செய்திருக்கிறார்.

இதை அறிந்த சங்கீதா, புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தன்னை ஏமாற்றி திருமணம் செய்ததோடு, 72 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் மோசடி செய்ததாகவும் அதில் கூறி இருந்தார். இந்த புகாரின் பேரில் சோலை கணேஷை போலீசார் கைது செய்தனர். அவரது தாய், சகோதரர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்