Bihar | Police | கேட்பாரற்று கிடந்த சூட்கேசில் இளம்பெண் சடலம் - பீகாரில் பரபரப்பு #Bihar #Police #SuitCase பீகாரில் சூட்கேசில் இளம் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டால்மியா நகர் பகுதியில் உள்ள காய்கறி சந்தைக்கு பின்னால் சிகப்பு நிற சூட்கேஸ் ஒன்று கேட்பாரற்று கிடந்துள்ளது. சூட்கேஸை திறந்து பார்த்தபோது, அதில் ஆடையின்றி இளம் பெண் ஒருவரின் சடலம் கிடந்ததைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொ*ல செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகின்றனர். உயிரிழந்த பெண் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் எனவும், பீகார் மாநிலம் ரோத்தாஸ் மாவட்டத்தில் திருமணமாகி வசித்து வந்ததும் தெரியவந்துள்ளது