Punjab | Crime | மாற்றுத் திறனாளியிடம் கைவரிசை காட்டிய இளைஞர்கள் | சக்கர நாற்காலியிலேயே விரட்டிச் சென்ற காட்சி
பஞ்சாப்பில் சக்கர நாற்காலியில் சென்ற மாற்றுத்திறனாளியிடம் வழிப்பறி பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் மாற்றுத் திறனாளியிடம் பட்டப் பகலில் இருவர் வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜிராக்பூர் பகுதியில் சக்கர நாற்காலியில் சென்ற சுரேந்திர பால் என்பவரிடம், இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் பர்ஸைப் பறித்துச் சென்றனர். அந்தப் பர்ஸில் ஐயாயிரம் ரூபாய் ரொக்கம், மொபைல் போன் மற்றும் முக்கிய ஆவணங்கள் இருந்தன. உடனே சற்றும் தாமதிக்காமல் சக்கர நாற்காலியிலேயே கொள்ளையர்களைத் துரத்த முயன்ற மாற்றுத் திறனாளியின் தைரியம் பாராட்டை பெற்றுள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தப்பியோடிய கொள்ளையர்களைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.