இந்தியா

விநாயகர் சிலை கரைக்கும்போது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்

தந்தி டிவி

ஹரிதுவாரில் கங்கை ஆற்றுல விநாயகர் சிலை கரைக்கும்போது ஒருத்தர் தண்ணீர்ல அடிச்சுட்டு போயிட்டாரு... இதுவரைக்கும் அவரோட நிலமை என்னனு தெரியல...

உத்தரகாண்ட் மாநிலம், ஹரிதுவாரில் விநாயகர் சிலையை கரைக்கும்போது, இளைஞர் ஒருவர் கங்கை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஹரிதுவாரில் விநாயகர் சதுர்த்தி அன்று வைக்கப்பட்டிருந்த சிலைகளை கரைப்பதற்காக சிலர் கங்கை ஆற்றுக்கு எடுத்துச் சென்றனர். நீரோட்டம் அதிகமாக இருந்ததால், ஆற்றில் இறங்கிய இளைஞர் ஒருவர் திடீரென தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்.அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்ட நிலையில், ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட இளைஞரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நீரோட்டம் அதிகமாக இருப்பதால், ஆற்றில் விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டாம் என காவல்துறையினர் தொடர்ந்து ஒலி பெருக்கியின் மூலம் அறிவுறுத்தி வந்துள்ளனர். எனினும், பொதுமக்கள் சிலர் அதனை பொருட்படுத்தாமல் விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைத்து வரும் நிலையில், இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை