மயங்கி நீச்சல் குளத்திற்குள் விழுந்து இளைஞர் பலி
குஜராத்தில் திடீரென மயங்கி நீச்சல் குளத்திற்குள் விழுந்து நீரில் மூழ்கி இளைஞர் உயிரிழக்கும் பதற வைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன..
ப்ரீத்...
குஜராத் மாநிலம் ராஜ்கோட் காக்வாட் பகுதியில் உள்ள ரிசார்ட்டில், 33 வயதான அஜய் ரதோடு என்ற இளைஞர் நீச்சல் குளத்தின் அருகே நின்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக திடீரென மயங்கி குளத்திற்குள் விழுந்தார்.
அவர் தண்ணீரில் தத்தளித்தபடி நீண்ட நேரம் உயிரிழக்கப் போராடியும், அருகில் இருந்தவர்கள் அவர் நீச்சல் அடிப்பதாக தவறாக நினைத்ததால் யாரும் அவரைக் காப்பாற்ற முன்வரவில்லை.
இதனால் நீரில் மூழ்கி அந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், இது தொடர்பான பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
ப்ரீத்...