இந்தியா

யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் கைது...

யெஸ் வங்கி நிதி முறைகேடு விவகாரத்தில், அதன் நிறுவனர் ராணா கபூரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

தந்தி டிவி

வாராக்கடன் சிக்கல் காரணமாக. யெஸ் வங்கியை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ள நிலையில், வங்கி நிதி விவகாரங்கள் தொடர்பாக, அதன் நிறுவனர் ராணா கபூரிடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது. முன்னதாக, மும்பையில் ராணா கபூரின் வீட்டிற்குச்சென்று அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதுடன், அவரின் மனைவி பிந்து கபூரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதையடுத்து ராணா கபூரை, அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், நிதி மோசடிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதால், ராணா கபூரை கைது செய்துள்ள அமலாக்கத்துறை அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளது. இதற்கிடையே, யெஸ் வங்கியின் 49 சதவீத பங்குகளை, ஸ்டேட் வங்கி கையகப்படுத்த உள்ளதாக அந்த வங்கியின் தலைவர் ரஜ்னிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்