உலக சுற்றுலா தினத்தையொட்டி, ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் விழிப்புணர்வு மணல் சிற்பத்தை சுதர்சன் பட்நாயக் உருவாக்கியுள்ளார். நமது நாட்டில் உள்ள சுற்றுலா தலங்களை தூய்மையாக வைத்துக் கொண்டால், பிளாஸ்டிக்கால் ஏற்படும் மாசை வெல்ல முடியும் எனவும் விழிப்புணர்வு வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. கடற்கரைக்கு வந்த மக்கள் விழிப்புணர்வு மணல் சிற்பத்தை புகைப்படம் எடுத்து சென்றனர்.