மஹாராஷ்டிரா மாநிலம் வசாயின் கோகுல்ட்வார் பகுதியில் பெய்த பலத்த மழை மற்றும் சூறைக்காற்று காரணமாக, கட்டிடத்தின் மேற்கூரையில் இருந்த உலோகத் தகடு ஒன்று திடீரென காற்றில் பறந்து வந்து, கீழே நடந்து சென்று கொண்டிருந்த பெண் மீது விழுந்து பயங்கர விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் அந்தப் பெண்ணின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்