மத்தியபிரதேச மாநிலம் சிவ்புரி பகுதியில் போலீசாரை பெண்கள் விரட்டியடித்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. அமோலா(Amola) என்ற கிராமத்தில் மதுக்கடையை மூடக்கோரி நூற்றுக்கணக்கான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது, போலீசார் தடியடி நடத்தியதால் ஆத்திரம் அடைந்த பெண்கள், போலீசாரை கற்களை வீசியும், கம்புகளால் தாக்கியும் விரட்டியடித்தனர். போலீசார் மிரண்டு ஓடும் வீடியோ வைரலாகி வருகிறது.