இந்தியா

தற்கொலைக்கு முயன்ற பெண்...கதவை உடைத்து காப்பாற்றிய காவலர்

தந்தி டிவி

உத்தரப்பிரதேசத்தில், வீட்டில் தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காவலர் ஒருவர், கதவை உடைத்து காப்பாற்றிய நிகழ்வு அரங்கேறியுள்ளது.

சித்திரக்கூட் பகுதியைச் சேர்ந்த சீமா ஸ்ரீவஸ்தவா என்பவர், காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு, தான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும், இதற்கு தனது கணவரே காரணம் என்றும் கூறியிருந்தார். இதையடுத்து உடனடியாக அங்கு விரைந்த தோமர் என்ற காவலர், வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பெண்ணை காப்பாற்றினார். இதற்காக பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்