இந்தியா

சூட்கேஸில் மனைவி உடல் - தற்கொலைக்கு முயன்ற கணவன்

தந்தி டிவி

பெங்களூருவில் மனைவியை கொலை செய்து சூட்கேஸில் அடைத்த கணவன், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவை சேர்ந்த ராகேஷ் மற்றும் கவுரி ஆகியோருக்கு திருமணமாகி பணியின் காரணமாக பெங்களூருவில் தங்கியிருந்தனர். இருவரும் இரவு வழக்கம்போல் உணவுக்காக அமர்ந்திருந்தபோது தகராறு ஏற்பட்டது. அப்போது கவுரி கத்தியை எடுத்து வீசியதால் ராகேஷூக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ராகேஷ், அதே கத்தியை எடுத்து கவுரியை குத்தி கொலை செய்துவிட்டு காவல்நிலையத்தில் சரண் அடைந்தார். அப்போது மயங்கி விழுந்த அவரை போலீசார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், ராகேஷ் விஷம் அருந்தியை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

Breaking | TN Election Result | நாளை ரிசல்ட் அறிவிப்பு... தேர்தல் ஆணையம் தீவிர ஆலோசனை

Gold Theft | `Gun Point'-ல் 1Kg தங்கத்தை தூக்கிய கும்பல்.. - கடைசியில் காத்திருந்த அதிரடி ட்விஸ்ட்

Delhi Fire | ஏசி வெடித்து உடல் கருகி பலியான 9 பேர் - தலைநகரில் பயங்கரம்

Chennai Airport எமர்ஜென்சி கதவை திறந்து குதித்துஓடிய பயணி - சென்னை ஏர்போர்ட்டில் குலைநடுக்க சம்பவம்

Engineering Course Application 2026 | இன்ஜினியரிங் படிப்புகளுக்கான விண்ணப்பம் தொடக்கம்