தம ிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நியாயமன வரி பங்கீட்டையே தமிழ்நாடு அரசு கோருவதாகவும், முதல்வர் கேட்கும் நிவாரண நிதியை மத்திய அரசு தர வேண்டுமெனவும் எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். காரைக்குடியில் சிஎஸ்ஐ கிறிஸ்தவ தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், அறியாமையை திமிரால் மறைப்பவர்களுக்கு உதாரணம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் என்றார். மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகார் விவகாரத்தில், பாஜக எம்.பி பிரிஜ் பூஷண் மீது நடவடிக்கை எடுக்க, பிரதமர் மோடி தயங்குவது ஏன் என தெரியவில்லை எனவும் கார்த்தி சிதம்பரம் குறிப்பிட்டார்