இந்தியா

யார் இந்த ரெஹானா பாத்திமா? ...

சபரிமலைக்கு சென்றே தீருவேன் என திடமாக நின்ற ரெஹானா பாத்திமா, கேரளாவில் நடைபெற்ற பொது இடத்தில் முத்தமிடும் போராட்டத்தில் பங்கேற்றவர்.

தந்தி டிவி

* சபரிமலைக்கு சென்றே தீருவேன் என திடமாக நின்ற ரெஹானா பாத்திமா,

கேரளாவில் நடைபெற்ற பொது இடத்தில் முத்தமிடும் போராட்டத்தில் பங்கேற்றவர்.

* சபரிமலைக்கு பெண்கள் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில் பெண் பத்திரிகையாளர் கவிதாவும் கேரளாவை சேர்ந்த ரெஹானா பாத்திமாவும் சபரிமலைக்கு செல்ல முயன்றனர்.

* கேரளா மாநிலத்தில் சமூக செயற்பாட்டாளராக செயல்பட்டு வரும் ரெஹானா பாத்திமா, மத்திய பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்லில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர்.

* பெண்களின் உடல் அமைப்பை வர்ணித்து பேராசிரியர் தெரிவித்த ஆபாசமான கருத்துக்கு எதிர்வினை ஆற்றும் வகையில் ரெஹானா நூதன போராட்டத்தை நடத்தி மக்களின் கவனத்தை ஈர்த்தவர்.

* கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கேரளாவில் நடந்த முத்த போராட்டத்திலும் பங்கேற்று பரபரப்பு கிளப்பியவர் இந்த ரெஹானா.

* சபரிமலை தீர்ப்பு வெளியான சில நாட்களிலேயே மாலை அணிந்து நெற்றியில் விபூதி பூசிய நிலையில் புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தார்.

* இன்று ரெஹானா பாத்திமா சபரிமலைக்கு சென்ற நிலையில் எர்ணாகுளத்தில் இருந்த அவரது வீட்டை மர்மநபர்கள் சிலர் தாக்கியுள்ளனர்.

* தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல் இருப்பதாகவும் ரெஹானா தெரிவித்து இருக்கிறார். இருந்தபோதிலும் சபரிமலைக்குள் செல்வது பெண்களின் உரிமையே என்பதில் திடமாக இருக்கிறார் ரெஹானா.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்