இந்தியா

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறப்பு - மண்டல, மகர விளக்கு பூஜை-மாலை 5 மணிக்கு திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

தந்தி டிவி

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறப்பை அறிவித்துள்ள தேவஸம்போடு, ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களை மட்டும் நாளை முதல் அனுமதிக்க உள்ளனர். கொரோனா தடுப்பூசி சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்துக்கு முன்பு எடுத்த ஆர்.டி.பி.சி.ஆர். நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் என கூறியுள்ள நிர்வாகம், தினசரி 30 ஆயிரம் பேரை அனுமதிக்க உள்ளதாக கூறியுள்ளது. அபிஷேகத்தை தொடர்ந்து பொறுப்பேற்கும் புதிய மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி, விளக்கு ஏற்றியவுடன் இந்த ஆண்டுக்கான தரிசனம் தொடங்க உள்ளது. பம்பையில் உள்ள கவுண்டரில் சரிபார்த்த பின், பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட உள்ளனர்.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக