கல்யாண் ரயில் நிலையத்தில், 32 வயதுடைய இளைஞர் ஒருவர் திடீரென நிலையத்தின் மேற்கூரையில் ஏறி, உயர் அழுத்த மின் கம்பத்திற்கு தாவினார். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக அந்த வழியாக இயக்கப்படும் மின்சார ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டது. ரயில்வே காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் அவரை கீழே இறங்க வைக்க முயன்றும் பலனளிக்கவில்லை. இதனிடையே, அந்த இளைஞர் கால் தவறி கீழே விழுந்து படுகாயமடைந்த நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.