இந்தியா

ஏ.டி.எம். இயந்திரத்தில் கார்டை நுழைத்தால் குட்டி விநாயகர் சிலையை பெறலாம்

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் பணம் எடுக்கும் ஏ.டி.எம். வடிவில் உருவாக்கப்பட்ட இயந்திரத்தில் இருந்து, சிறிய அளவிலான விநாயகர் சிலை வருகிறது.

தந்தி டிவி
விநாயகர் சதுர்த்தி விழா, நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் பணம் எடுக்கும் ஏ.டி.எம். வடிவில் உருவாக்கப்பட்ட இயந்திரத்தில் இருந்து, சிறிய அளவிலான விநாயகர் சிலை வருகிறது. இதற்கென தனியாக ஏடிஎம் கார்டுகளும் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்தக் கார்டை இயந்திரத்தில் உள்ளே நுழைத்தவுடன், பணம் வருவது போல், சிறிய டப்பாவில் வைக்கப்பட்ட விநாயகர் சிலை வருகிறது. இந்த "விநாயகர் சிலை ஏடிஎம் இயந்திரத்தை" தயாரித்த சஞ்சீவ் குல்கர்னி கூறும்போது, நவீன தொழில்நுட்பத்தில் கலாச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் முயற்சியாக இது உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்