இந்தியா

ஏ.டி.எம். இயந்திரத்தில் கார்டை நுழைத்தால் குட்டி விநாயகர் சிலையை பெறலாம்

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் பணம் எடுக்கும் ஏ.டி.எம். வடிவில் உருவாக்கப்பட்ட இயந்திரத்தில் இருந்து, சிறிய அளவிலான விநாயகர் சிலை வருகிறது.

தந்தி டிவி
விநாயகர் சதுர்த்தி விழா, நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் பணம் எடுக்கும் ஏ.டி.எம். வடிவில் உருவாக்கப்பட்ட இயந்திரத்தில் இருந்து, சிறிய அளவிலான விநாயகர் சிலை வருகிறது. இதற்கென தனியாக ஏடிஎம் கார்டுகளும் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்தக் கார்டை இயந்திரத்தில் உள்ளே நுழைத்தவுடன், பணம் வருவது போல், சிறிய டப்பாவில் வைக்கப்பட்ட விநாயகர் சிலை வருகிறது. இந்த "விநாயகர் சிலை ஏடிஎம் இயந்திரத்தை" தயாரித்த சஞ்சீவ் குல்கர்னி கூறும்போது, நவீன தொழில்நுட்பத்தில் கலாச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் முயற்சியாக இது உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி