இந்தியா

என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்ட ரவுடி விகாஸ் துபே

என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்ட ரவுடி விகாஸ் துபேயுடன் தொடர்பில் இருந்த 37 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி, உத்தர பிரதேச டிஜிபிக்கு அம்மாநில உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி
உத்தரபிரதேச மாநில பிரபல ரவுடி விகாஸ் துபேயை கைது செய்ய கடந்த ஜூலை 3 ஆம் தேதி கான்பூர் சென்ற போலீசார் மீது ரவுடிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 போலீசார் பரிதாபமாக உயிரிழந்தனர். அதன் பின்னர், ஜூலை 10 ஆம் தேதி விகாஸ் துபேயை போலீசார் என்கவுன்டர் செய்தனர். இந்நிலையில், கான்பூரில் பணியாற்றிய போது 37 போலீசார் விகாஸ் துபேக்கு உதவியதாக சிறப்பு விசாரணை குழு நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த பட்டியலில் 18 இன்ஸ்பெக்டர்கள், 10 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 8 கான்ஸ்டபிள்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 8 போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியும், 22 போலீசாரை விசாரணைக்கு உட்படுத்த கோரியும் உள்துறை அமைச்சக செயலாளர் பரிந்துரைத்துள்ளார்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்