இந்தியா

"மல்லையா-வுக்கு அருண்ஜெட்லி மறைமுகமாக உதவியுள்ளார்" - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

விஜய் மல்லையா நாட்டை விட்டு வெளியேற மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி மறைமுகமாக உதவி செய்துள்ளதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

தந்தி டிவி

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது சந்திப்புகள் குறித்து சமூக வலைதளத்தில் எழுதி வரும் அருண் ஜெட்லி, விஜய் மல்லையா உடனான சந்திப்பு குறித்து எதுவும் கூறவில்லை என்றார்.

மல்லையாவுடன் ஒரு சில வார்த்தைகள் மட்டுமே பேசியதாக ஜெட்லி கூறுவது முற்றிலும் பொய் என்று கூறியுள்ள ராகுல், லண்டன் செல்வதை விஜய் மல்லையா கூறியுள்ள நிலையில், இதுபற்றி சிபிஐ, அமலாக்கத்துறை, போலீஸிடம் அவர் ஏன் கூறவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.

ரபேல் போர் விமானம் மற்றும் விஜய் மல்லையா விவகாரங்களில் அரசு பொய் சொல்வதாக அவர் கூறியுள்ளார். இருவர் இடையிலான சந்திப்பு குறித்து அருண் ஜெட்லி விளக்க வேண்டும் என்றும், பதவி விலக வேண்டும் எனவும் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை