Vijay Deverakonda | Rashmika Mandanna | கல்யாணம் முடிந்த கையோடு விஜய் தேவரகொண்டா அறிவிப்பு! திருமணத்திற்குப் பின் தனது பூர்வீக கிராமத்திற்குச் சென்ற நடிகர் விஜய் தேவரகொண்டா, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளார். தெலங்கானாவின் தும்மல்பேட்டா கிராமத்தில் உள்ள சத்யநாராயண சுவாமி கோயிலில், தனது மனைவி ராஷ்மிகா மந்தனாவுடன், விஜய் தேவரகொண்டா பூஜை செய்தார். பின்னர் அச்சம்பேட்டை தொகுதியில் உள்ள 44 அரசுப் பள்ளிகளில் படிக்கும், 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களின் கல்விக்காக, தேவரகொண்டா அறக்கட்டளை மூலம் உதவித்தொகை வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார். இதனால் அவருக்கு, ரசிகர்கள் மற்றும் கிராம மக்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.