இந்தியா

ஆந்திராவில் மோட்டார் வாகன ஆய்வாளர் வீடுகளில் சோதனை - லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

ஆந்திராவை சேர்ந்த மோட்டார் வாகன ஆய்வாளரின் வீடுகளில் நடைபெற்று வரும் லஞ்ச ​​ஒழிப்பு சோதனையில், 20 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தந்தி டிவி

கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த மோட்டார் வாகன ஆய்வாளர் சிவபிரசாத் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து அவருக்கு சொந்தமான வீடு மற்றும் நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆந்திரா, ஐதராபாத், பெங்களூரு உள்ளிட்ட 5 இடங்களில் நடைபெறும் சோதனையில் சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் கர்னூலில் உள்ள அவரது வீட்டில் இருந்து ஒரு கிலோ தங்கம், ஒன்றரை லட்சம் ரொக்கம் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன் ஐதராபாத் மற்றும் உகாண்டா நாட்டில் சிவபிரசாத் வங்கி லாக்கர் வைத்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Breaking | CM Stalin | DMK | நேரில் சந்திக்கும் CM ஸ்டாலின்? | வெளியான முக்கிய தகவல்

Breaking | Congress | TN Election 2026 | நாளை சென்னை வரும் VIP | பரபரக்கும் காங்கிரஸ்

Breaking | TVK Vijay | காத்திருக்கும் சர்ப்ரைஸ்? | நாளை அறிவிக்கிறார் விஜய்

BREAKING || 2வது குழந்தை பெற்றால்... வெளியான ஜாக்பாட் அறிவிப்பு

BREAKING || ஆசிரியர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு