உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா - கான்பூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து தீடீரென தீ பிடித்து எரியத் தொடங்கியதால் பயணிகள் அலறியடித்து கீழே இறங்கி தப்பினர். இந்த விபத்தில் பயணிகள் காயமின்றி தப்பியதுடன், பேருந்து முழுவதுமான எரிந்து சாம்பலானது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதுடன், சற்று நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.