இந்தியா

உத்தரப்பிரதேசத்தில் ராகுல், பிரியங்கா காந்தி கைது எதிரொலி - முதல்வர் நாராயணசாமி தலைமையில் உண்ணாவிரதம்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் கைது செய்யப்பட்டதை கண்டித்து, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தந்தி டிவி

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தலித் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து, அவரது வீட்டிற்கு ஆறுதல் கூற சென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அப்போது நடந்த தள்ளுமுள்ளுவில் ராகுல் காந்தி கீழே விழுந்தார். இந்த சம்பவத்தை கண்டித்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். அப்போது பேசிய நாராயணசாமி, உத்தரப்பிரதேச மாநிலத்தில் தலித் பெண்கள் கற்பழிப்பு சம்பவம் தொடர் கதையாகி வருவதாக குற்றம்சாட்டினார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி