இந்தியா

உத்தரப்பிரதேசத்தில் ராகுல், பிரியங்கா காந்தி கைது எதிரொலி - முதல்வர் நாராயணசாமி தலைமையில் உண்ணாவிரதம்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் கைது செய்யப்பட்டதை கண்டித்து, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தந்தி டிவி

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தலித் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து, அவரது வீட்டிற்கு ஆறுதல் கூற சென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அப்போது நடந்த தள்ளுமுள்ளுவில் ராகுல் காந்தி கீழே விழுந்தார். இந்த சம்பவத்தை கண்டித்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். அப்போது பேசிய நாராயணசாமி, உத்தரப்பிரதேச மாநிலத்தில் தலித் பெண்கள் கற்பழிப்பு சம்பவம் தொடர் கதையாகி வருவதாக குற்றம்சாட்டினார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்