இந்தியா

"ஒரு லிட்டர் பாலை 81 பிள்ளைகளுக்கு கொடுத்த பரிதாபம்"

உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஒரு லிட்டர் பாலை ஒரு வாளி தண்ணீரில் கலந்து 81 குழந்தைகளுக்கு கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

உத்தரபிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் கோட்டா என்ற கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டத்தின் கீழ் உணவு வழங்கப்பட்டு வருகிறது. பள்ளியில் உள்ள 81 மாணவர்களுக்கு ஒரு லிட்டர் பாலை ஒரு வாளி தண்ணீரில் கலந்து கொடுக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து அதிகாரிகள் பள்ளிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். ஆரம்ப பள்ளியில் உள்ள குழந்தைகளுக்கு நாளொன்றுக்கு 150 மில்லி லிட்டர் பால் வழங்க வேண்டும் என உத்தரவு உள்ள நிலையில் 81 குழந்தைகளுக்கு ஒரு லிட்டர் பால் வழங்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே இதேபோல் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுக்கு ரொட்டிக்கு உப்பு வழங்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தற்போது மீண்டும் இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது...

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி