உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் கங்கை நதிக் கரையில் நீச்சல் உடையுடன் இருந்த ஜப்பான் பயணிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சாண்டா கிளாஸ் தொப்பி அணிந்தவாறு ஜப்பான் பயணிகள் சிலர் கங்கைக்கு குளிப்பதற்காக வந்திருந்தனர். அவர்களது ஆடைக்கு ஆட்சேபம் தெரிவித்த அப்பகுதி மக்கள், வாக்குவாதம் செய்ததால் ஜப்பானியர்கள் மன்னிப்பு கோரினர்.