ஹார்ட் அட்டாக்.. DJ சத்தத்தால் துடிதுடித்து கொத்தாக பலியான 140 கோழிகள்
உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூரில் திருமண ஊர்வலத்தின் போது ஒலிக்கப்பட்ட அதிக சத்தத்துடன் கூடிய இசையால், பண்ணையில் இருந்த 140 கோழிகள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் பிரஜ்நாராயண் சிங், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக சத்தத்துடன் இசை ஒலிக்கப்பட்டது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். உயிரிழந்த கோழிகளின் உடற்கூராய்வு அறிக்கையில், அதிகப்படியான சத்தத்தால் ஏற்பட்ட கடுமையான மன அழுத்தம் காரணமாக அவற்றுக்கு மாரடைப்பு ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகத் சிலருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், இனிவரும் காலங்களில் அனுமதிக்கப்பட்ட ஒலி அளவை விடக் கூடுதலாகச் சத்தம் எழுப்பக்கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.