இந்தியா

சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம்..! 10 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கும் ஐயப்பன் பக்தர்கள்

தந்தி டிவி

சபரிமலை ஐயப்பன் கோவிலில் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் படையெடுப்பதால் கூட்ட நெரிசலுடன் காணப்படுகிறது. இதனால் கூட்ட நெரிசலை தவிர்க்க எருமேலி, நிலக்கல், துலாபள்ளி உள்ளிட்ட பகுதிகளில், ஐயப்ப பக்தர்களை வாகனங்களை நிறுத்தியுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் சாலையிலேயே வாகனங்களை நிறுத்தி 10 மணி நேரத்திற்கும் மேலாக பக்தர்கள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பம்பை செல்லும் பக்தர்கள் மலையேற 5 மணி நேரம் காத்திருப்பதாகவும், உணவு குடிநீர் இன்றி கடும் குளிரில் அவதிப்படுவதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்