உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி குல்தீப் சிங் செங்கருக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றம் முன் போராட்டம் நடைபெற்றது. உத்தர பிரதேச மாநிலம் உன்னாவில் வேலை கேட்டுச் சென்ற பெண்ணை பாஜக எம்எல்ஏ-வாக இருந்த குல்தீப் சிங் செங்கர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், அவருக்கு வழங்கிய ஜாமினை ரத்து செய்ய கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன.